"No Excuse.. வந்தே ஆகணும்" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!

x

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் புதன்கிழமை நண்பகல் 12 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்