டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை

x

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அதன் படி பாஜக தமிழகம் உட்பட இதுவரை 292 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் பாஜகவின் மூன்றாவது மத்திய தேர்தல் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில், உத்தரப் பிரதேஷம், ராஜஸ்தான், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே, பாஜக ஓரிரு நாட்களில் 150 பேர் கொண்ட ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.....


Next Story

மேலும் செய்திகள்