தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங். எம்.எல்ஏக்கள் - அடுத்த நொடி பாஜகவில் ஐக்கியம்

x

இமாச்சலப் பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் கட்சி மாறி வாக்களித்த‌தால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர்கள் 6 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த இடங்களுக்கு ஜூன் 1ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 பேரும், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில தலைவர் முன்னியில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களே மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்