சி.வி.சண்முகம் மீது தமிழக அரசு போட்ட வழக்கு - நாளை கையில் எடுக்கும் உச்சநீதிமன்றம்

x

தன் மீதான 2 அவதூறு வழக்குகளை ரத்துசெய்ய கோரி, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.முதலமைச்சர் ஸ்டாலினையும், தமிழக அரசையும் விமர்சித்து பேசியதாக கூறி, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மீது, தமிழக அரசு 4 அவதூறு வழக்குகளை பதிவுசெய்தது. விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்குகளை ரத்துசெய்யக் கோரி, சி.வி.சண்முகம் மனுத்தாக்கல் செய்த நிலையில், 2 வழக்குகளை மட்டும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து மீதமுள்ள 2 வழக்குகளையும் ரத்துசெய்யக் கோரி, சி.வி.சண்முகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்