காங். மூலம் திமுக கூட்டணியில் இணையும் ம.நீ.ம? - செல்வப் பெருந்தகை தரும் பதில் என்ன?

x

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை, தேர்தல் நேரத்தில் பொறுப்பேற்று இருந்தாலும் சவால்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலை மற்றும் சின்னமலையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அனுபவம் வாய்ந்த தலைவர்களை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என உறுதியளித்தார். மேலும், காங்கிரஸ் மூலம் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணையவுள்ளதாக வெளியான தகவலுக்கும் செல்வப் பெருந்தகை பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்