"ஆன்மீகத்தையும் திராவிடத்தையும் இணைக்கும் நிகழ்ச்சி"--கலகலப்பாக பேசிய அமைச்சர்

x

முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் சேகர்பாபு சார்பில் 20 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 20 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. புது மணத்தம்பதிக்களுக்கு கட்டில், பீரோ, கிரைண்டர், உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர் ஆன்மீகத்தையும், திராவிடத்தையும் இணைக்கும் விழா என திருமண நிகழ்வினை குறிப்பிட்டார். மேலும் திருமணத்திற்கு பின் குடும்ப பெண்களின் பேச்சை கேட்க வேண்டும் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்