நிகழ்ச்சிக்கு லேட்டாக வந்த மேயர் பிரியா... மேடையில் வைத்தே அமைச்சர் சேகர் பாபு செய்த செயல்

x

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா நகரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மேயர் பிரியா ராஜன் கால தாமதமாக வந்தார். இதனால் அவரைக் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு, கால தாமதமாக வந்த பிரியா ராஜனை அன்போடு வரவேற்பதாகக் நகைச்சுவையாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்