DK சிவக்குமார் முன் கோபத்தில் கண் சிவந்த CM சித்தராமையா.. MLAக்களை திட்டியதால் பற்றிய பரபரப்பு

x

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சி, தேர்தலின்போது மக்களுக்கு அறிவித்த ஐந்து உத்தரவாதங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு நிதி கிடைக்கவில்லை என்று கூறி, எம்எல்ஏக்கள் சிலர், முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினர். இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அப்போது, அரசின் உத்தரவாத திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்படுவதால், எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு ஒதுக்க முடியவில்லை அவர் கூறினார். கடிதம் எழுதி தேவையில்லாத குழப்பத்தை ஏன் ஏற்படுத்துகிறீர்கள் என்றும் அவர் கோபத்துடன் கேள்வி எழுப்பினர். அதற்கு, தங்களின் கவனத்துக்கு கொண்டு வரவே கடிதம் எழுதினோம் என்று எம்எல்ஏக்கள் கூறினர். அதற்கு நிர்வாக ரீதியில் பிரச்னை இருந்தால், மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தெரிக்கலாம் என்று சித்தராமையா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்