" 1 மாதத்தில் நிரப்பப்படும்" - அமைச்சர் அளித்த உறுதி

x

மக்கள் நல்வாழ்வுத்துறையில் 5 ஆயிரத்து100 காலிப்பணியிடங்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் பொது சுகாதாரத் துறையில் 332 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்புனர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த இரண்டரை ஆண்டுகளில் 30 ஆயிரத்து 987 காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்