"நீதித்துறையை நிலை குலையச் செய்யும் பாஜக அரசு" - முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் மீது புகார்

x

தமிழக பாஜக சட்டப்பிரிவின் மாநில துணைத் தலைவர் குமரகுரு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அரிபரந்தாமன் தமிழ்நாடு பொதுமேடை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளதாகவும், அவர் தேர்தல் சமயத்தில் "நீதித்துறையை நிலை குலையச் செய்யும் பாஜக அரசு " என்ற தலைப்பில் சிறு புத்தக வடிவில் குறிப்பேடு ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விநியோகம் செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். நீதித்துறை பாஜக அரசின் கைப்பிடியில் உள்ளது என்றும், தீர்ப்புகளை பாஜக அரசு சொல்வது போல் நீதிமன்றங்கள் அளிக்கிறது என்ற ஒரு விஷக்கருத்தை விதைத்திருக்கிறார் என குற்றம் சாட்டிய குமரகுரு, அரிபரந்தாமன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்