இந்த நோய் TVK-யையும் அட்டாக் பண்ணிடுச்சா.. பதறிய விஜய்.. அலர்ட் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்

x

cஅதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் மட்டுமே அறிவிப்பு வெளியாகும் என்றும், யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான், கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும், கடந்த 19-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலை தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்