"பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை" - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

x

மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே நடவடிக்கை எடுப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனக் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் பாஜக ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை என பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது, திமுக எம்பி ஜெகத்ரக்ஷகனின் வீட்டில் நடைபெறும் ஐடி ரெய்டுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்