பாஜகவின் "பாரத மாதா" சிலை விவகாரம்விருதுநகர் கலெக்டருக்கு பறந்த உத்தரவு

x

பா.ஜ.க. அலுவலகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட "பாரத மாதா" சிலையை மீட்ட வருவாய்த்துறையிடம் இருந்து சிலையை திரும்ப ஒப்படைக்க கோரி வழக்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சூறைக்குண்டு அருகே பாஜக மாவட்ட அலுவலகம் முன், மக்களுக்கு வெளியே தெரியும் வண்ணம் "பாரத மாதா" சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை மீட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம்,மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்