பாஜக பேனரால் கொதித்தெழுந்த விசிக... குவிந்த போலீசார்... பரபரத்த வந்தவாசி

x

வந்தவாசியில் பாஜகவின் பேனரில், அண்ணாமலை கலியுக அம்பேத்கர் என குறிப்பிடப்பட்டதற்கு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வைக்கப்பட்டுள்ள பாஜக பேனரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலியுக அம்பேத்கர் என குறிப்பிடப்பட்டிருந்தார். இதற்கு விடுதலை சிறுத்தைகள், குடியரசு கட்சி மற்றும் புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவின் பேனரை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்