"தேர்தல் பத்திரம்.. அது ஊழல் இல்லை...பாஜக மட்டும் பணம் பெறவில்லை..." தமிழிசை பரபரப்பு பேட்டி | BJP

x

தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என்று தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்... மக்களவைத் தேர்தலையொட்டி தமிழிசை சென்னை கோடம்பாக்கம் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆரத்தி எடுத்தும் சங்கொலி எழுப்பியும், மலர்களைத் தூவியும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கோடம்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் தமிழிசை பிரசார வாகனத்தில் இருந்தபடியே சாமி தரிசனம் செய்தார்... இடையில் உணவகம் ஒன்றில் எளிமையாக காலை உணவு சாப்பிட்ட அவர், தொடர்ந்து தொண்டர்கள் வழங்கிய தாமரையைக் கையில் வைத்தபடி வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்