ராகுலுக்கு ஆதரவாக கர்நாடகாவில் பற்றிய நெருப்பு.. போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

x

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு, அசாம் அரசு இடையூறு ஏற்படுத்துவதாகக்கூறி, கர்நாடக இளைஞர் காங்கிரஸார், நேற்று மாலை தீப்பந்தம் ஏந்தி, காங்கிரஸ் பவனில் இருந்து, சுதந்திர தின பூங்கா வரை பேரணியாகச் சென்றனர். இதற்கு போலீசாரிடம் முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸாரின் இந்தப் பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவானது. இதைத்தொடர்ந்து, பேரணிக்கு ஏற்பாடு செய்த கர்நாடக காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் முகமது நல்பாட் மற்றும் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸார் மீது பெங்களூரு போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்