எல்லையில் தடுத்து நிறுத்தப்பட ராகுல்...மாணவர்களை திரட்டி செய்த காரியம் - ஒன்று கூடிய கூட்டம்

x

பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் மாணவர்களை அடிமையாக்க முடியாது என, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலத்தில் பாரத ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். அசாம் மற்றும் மேகாலயா எல்லையில் அமைந்துள்ள கல்லூரிக்குள் மாணவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், வெளியில் இருந்தவாறு, அங்கு திரண்ட மாணவர்கள் மத்தியில் பேசினா​ர். ஆட்சியில் இருப்பவர்கள் மாணவர்களை அடிமையாக நினைப்பதாகவும், ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் அடிமையாக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். உங்களின் மொழியை பேச முடியாது, உங்களுக்கான வரலாற்றை நீங்கள் கொண்டிருக்க முடியாது என கூறப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மாணவர்கள் எதைப் பற்றியும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும், நீங்கள் விரும்பும் இந்தியாவைப் பற்றி சிந்திக்க எதுவும் உங்களை தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். நீங்கள் எதுவாக வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறு வாழ அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், மற்றவர்கள் விரும்புவது போல் அல்ல என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்