கூச்சலிட்டவாரே பாஜக கூட்டத்திற்குள் சென்ற விசிக நிர்வாகி - பரபரப்பு காட்சிகள்

x

அரியலூர் மாவட்டம் மணக்கால் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளருக்கும், விசிக ஒன்றிய பொருளாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பிரசாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது...விசிக தலைவர் திருமாவளவன், தொகுதி மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என பேசிக்கொண்டிருந்த கார்த்தியாயினியை, விசிக நிர்வாகி பூமிநாதன் பேச்சை நிறுத்தும்படி கூச்சலிட்டவாறு கூட்டத்திற்குள் சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பூமிநாதனை அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்த நிலையில், கார்த்தியாயினி தனது பேச்சை நிறுத்தாமல் பரப்புரையில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்