"மகளிருக்கு 5 சவரன் தங்கம்..அரை ஏக்கர் நிலம்" - வாக்குறுதிகளை அள்ளி வீசிய கோவை வேட்பாளர்

x

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் துரைசாமி என்பவர், நடனம் ஆடியபடி "முருகா... முருகா..." என பாடல் பாடியபடி வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனால், பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை ஐந்து சவரன் தங்க நகை தருவதாக வாக்குறுதி அளித்தார். நிலம் இல்லாதவர்களுக்கு அரை ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.


Next Story

மேலும் செய்திகள்