`விரைவில் அண்ணாமலை'...தமிழகம் வரும் அமித்ஷா, ராஜ்நாத் சிங்...மாஸ்டர் பிளான் ரெடி

x

"என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விரைவில் 200வது தொகுதியை நிறைவு செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு சென்னையில் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்துக்கொள்வார் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பிப்ரவரி மாதத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் தமிழகம் வருவார்கள் என கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்