"அது எப்படி அப்படி பேசலாம்" - வட மாநிலத்தவர்களுக்காக கொந்தளித்து முதல்வருக்கு அண்ணாமலை கடிதம்

x

வடஇந்தியா ம ற்றும் வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி குறித்து தெரிந்து கொள்ள திமுக தலைவர்கள் 50 பேருக்கு ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வழங்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது வடமாநிலத்தவர் கல்வியறிவு இல்லாதவர்கள், திறமையற்றவர்கள் எனக் கூறி, தமிழ்நாடு மக்களை திமுக தவறாக வழி நடத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தங்களை சுயமரியாதைக்காக குரல் கொடுப்பவர்கள் என திமுக கூறிக் கொண்டாலும், திமுக தலைவர்கள் மீண்டும் மீண்டும் அதனை பொய் என்று நிரூபித்து வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்