"ஆதாரங்கள் இருந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை" - அமித்ஷாவுக்கு பறந்த கடிதம்

x

அசாமில் ராகுல் காந்தி எதிர்கொண்ட பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். கடந்த 18ம் தேதி யாத்திரை அசாமிற்குள் நுழைந்ததில் இருந்து, இசட்+ பாதுகாப்பிற்கு தகுதியான ராகுல்காந்திக்கு போதுமான பாதுகாப்பை வழங்க அசாம் காவல்துறை தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். யாத்திரைக்கு பாதுகாப்பான வழியை உறுதி செய்வதற்கு பதிலாக, பா.ஜ.க. சுவரொட்டிகளை அசாம் காவல்துறையினர் பாதுகாப்பதை கண்டறிந்ததாக மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டது உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆதாரங்கள் இருந்தும், குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை அசாம் முதல்வர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் உறுதி செய்ய, உள்துறை அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்