ஜெயக்குமார் பிரசார ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்ட பெண்கள் - பார்த்து ரசித்த பொதுமக்கள்

x

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பழங்கள் விற்பனை செய்து வட சென்னை வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவரை பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் அதிமுக தொண்டர்கள் வரவேற்றனர். வேட்பாளர் இராயபுரம் மனோவுக்கு பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பிரசார ஊர்வலத்தில் பெண்கள் குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்