அதிமுக நிர்வாகிகளுக்குள் கோஷ்டி மோதல்... காவல் நிலையத்திற்கு பறந்த புகார்... நாமக்கல்லில் பரபரப்பு

x

தேர்தல் முன்விரோதத்தால், தாக்க முயன்ற அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது, அதே கட்சியை சேர்ந்த இன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு காவல்நிலையத்தில் ஆரியர் நாடு அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் நாகலிங்கம் புகார் மனு அளித்தார். அதில், மக்களவை தேர்தல் வாக்கு சேகரிப்பின் போது, முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், தனது அடி ஆட்களுடன் வந்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் நாகலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்