பேனரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முயற்சி - போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்

x

சென்னை தண்டையார்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனரை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்காக, தண்டையார்பேட்டையில் அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர். ஆனால், அனுமதியின்றி வைக்கப்பட்ட‌தாக‌க் கூறி, மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர், மற்ற கட்சியினரின் பேனரை அகற்றாமல், இதை ஏன் அகற்றுகிறீர்கள் எனக்கூறி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். மேலும், பேனருக்கு கீழே அமர்ந்து அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்