வெற்றிலை பாக்கு தட்டில் தக்காளி... அதிமுக மாநாட்டுக்காக வித்தியாசமான முறையில் அழைப்பு

x

அதிமுக பொதுக்கூட்டத்திற்காக, வெற்றிலை பாக்கு தட்டில் ஒரு கிலோ தக்காளி வைத்து பொதுமக்களுக்கு கட்சியினர் அழைப்பு விடுத்தனர். பழனியின் முன்னாள் அமைச்சர் ந‌த்தம் விஸ்வநாதன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மதுரை மாநாட்டுக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்களை அழைத்துச் செல்வது குறித்து ஆலசோனை வழங்கப்பட்டது. பின்னர், அதிமுக கவுன்சிலர் ராஜா முகமது ஏற்பாட்டில், வெற்றிலை பாக்கு தட்டில் ஒரு கிலோ தக்காளி வைத்து பொதுமக்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை ந‌த்த‌ம் விஸ்வநாதன் வழங்கினார். ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்