"தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்.. 15 இடங்களுக்கு குறையாமல் வெற்றி" - ஏ.சி.சண்முகம்

x

தமிழகத்தில் மும்முனைப் போட்டி வந்தாலும்,15 இடங்களுக்கு குறையாமல் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று, புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் ஏசிஎஸ் குழுமம் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர் என்றும்,வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்