“பிரச்சாரத்தில் நடந்த ஆச்சரியம்’’ - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

x

பாஜக மீது மக்கள் கொண்டுள்ள பாசமும் நம்பிக்கையும்தான் தங்களது மிகப்பெரிய சொத்து என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 21-ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக, மத்திய பிரதேசத்தை மாற்ற பாஜகவால் மட்டுமே முடியும் என்று மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருப்பதாக கூறியுள்ளார். வளர்ந்த மத்திய பிரதேசம் மற்றும் வளர்ந்த இந்தியா அமைய அனைவரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்