அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட்

x

தமிழகத்துக்கு சேர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக அரசிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, பிரச்சினையின்றி வந்து கொண்டிருந்த காவிரி நீரை நிறுத்தியிருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அவர், இதை கண்டித்து போராடிய விவசாயிகளை தமிழக காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டித்துள்ளார். விவசாயிகள் நலன்களை பலிகொடுப்பதை திமுக எப்போது நிறுத்தும்? என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், மோடி அரசின் முயற்சியால்தான் காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது என தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்