2024 எலெக்சன்.. மாயாவதியின் திடீர் முடிவு.. ஒரே ஸ்ட்ரோக்கில் ஷாக்கான பாஜக, இந்தியா கூட்டணி

x

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2007ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், பழங்குடியினர் ஆதரவுடன் உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த‌தாக கூறினார். தங்களுக்கு கூட்டணிகள் ஒருபோதும் பலனளித்த‌தில்லை என்றும், அதனால்தான் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். பல்வேறு கட்சிகள் கூட்டணி வைக்க விரும்புவதாக கூறிய மாயாவதி, தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்