"கோவாவில் வெற்றி பெற்றால் மக்களவையிலும் வெற்றி" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோவாவில் வெற்றி பெற்றால் மக்களவையிலும் வெற்றி - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு
x
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுகிறது. இந்நிலையில் தலாநகர் பானாஜியில், காங்கிரஸ் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், 2007 ஆம் ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக தெரிவித்தார். இதேபோல், 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கோவா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்தை பாஜக கைப்பற்றியதாக கூறினார். இதேபோல் அடுத்த  ஆண்டு கோவா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிதான் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறும் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்