4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - பொறுப்பாளர்களை நியமித்த பாஜக

4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து பாரதிய ஜனதா கட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - பொறுப்பாளர்களை நியமித்த பாஜக
x
4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து பாரதிய ஜனதா கட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தல் வேலைப்பாடுகளைத் துவங்கியுள்ளபாஜக, 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அதன்படி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உத்திர பிரதேச தேர்தல் பொறுப்பாளராகவும்,  பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் சிங் ஜோஷியை, உத்தரகாண்ட் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது.

மேலும், அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தை பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராகவும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் தேசியத் தலைவர் ஜேபி. நட்டா நியமித்துள்ளார். தர்மேந்திர பிரதானுடன், 7 பேர் துணை பொறுப்பாளர்களகாவும், கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் மத்திய அமைச்சர் சிங் பூரி மற்றும் மீனாட்சி உள்ளிட்டோர் கூடுதல் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்