மானிய கோரிக்கை-எதிர்பாராத அறிவிப்பு உண்டு - அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு

அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது எதிர்பாராத பல அறிவிப்புகள் இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
x
சென்னை யானைக்கவுனி பகுதியில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சென்னையில் மழை நீர் தேங்குமிடங்களை ஆய்வு செய்து வருவதாகவும், பருவமழைக்கு முன்பு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை பலப்படுத்தி, பாதியில் நிற்கும் பணிகளை நிறைவேற்றுவதை, துறை அமைச்சர் முடுக்கிவிட்டுள்ளார் என்றார். அறநிலையத் துறை மீதான மானிய கோரிக்கையில், எதிர்பாராத அளவுக்கு முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்