ஆக்சிஜன் ஏற்றுமதி 700% அதிகம்; கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கொரோனா காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவிகிதம் அதிகபடுத்தியதன் காரணமாகவே, கொரோனா பலி எண்ணிக்கை உயர்ந்ததாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா காலத்தில் ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவிகிதம் அதிகபடுத்தியதன் காரணமாகவே, கொரோனா பலி எண்ணிக்கை உயர்ந்ததாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை ஏற்படுத்த எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். ஆக்சிஜனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்த செல்ல டாங்கர்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story