திமுகவின் பிரம்மாண்ட பிரசார பொதுகூட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
திமுகவின் பிரம்மாண்ட பிரசார பொதுகூட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
x
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில், திருச்சி சிறுகனூர் பகுதியில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை மு.க. ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கி வைத்தார். பிற்பகலில் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றிய பின்னர், தமிழகத்தின் 10 ஆண்டு செயல்திட்ட ஆவணத்தை வெளியிட்டு ஸ்டாலின் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்திற்கு திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து ஏராளமான திமுகவினர் வருவார்கள் என்பதால், சுமார் 2 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. 360 ஏக்கரில் பொதுக்கூட்ட திடல், 340 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம், பிரம்மாண்ட எல்.இ.டி திரை, உணவு ஸ்டால்கள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்