முன்னுரிமை அளிப்பதில்லை என வெளிநடப்பு - திமுக,காங்கிரஸ், கம்யூ. கட்சியினர் புகார்

10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை.
முன்னுரிமை அளிப்பதில்லை என வெளிநடப்பு - திமுக,காங்கிரஸ், கம்யூ. கட்சியினர் புகார்
x
10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை.26 லட்சத்து, 85 ஆயிரத்து  671, ஆக உள்ளது. மதுரை மாவட்ட வாக்காளர் பட்டியலை, ஆட்சியர் அன்பழகன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதிலும் கூடுதலாக ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியில் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என புகார் கூறினர். பின்னர், ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், முழக்கங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரும் வெளியில் சென்றதை தொடர்ந்து அதிமுக, பாஜகவினர் மட்டும் கலந்து கொண்டனர். 



Next Story

மேலும் செய்திகள்