வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ பேரணி : புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லியில் உள்ள புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது என, விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ பேரணி : புராரி மைதானத்திற்கு செல்ல முடியாது - விவசாயிகள் திட்டவட்டம்
x
வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியை நோக்கி விவசாயிகள் டெல்லி சலோ பேரணி மேற்கொண்டுள்ளனர். அவர்களை டெல்லி எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், பேச்சு வார்த்தைக்காக புராரி மைதானத்திற்கு வருமாறு, விவசாயிகளுக்கு உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது. இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள், புராரி மைதானத்திற்கு செல்லப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் விவசாயிகளை அவமதிக்கும் விதமாக இருப்பதாகவும், திறந்த வெளி சிறையான புராரி மைதானத்திற்கு செல்ல மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதேபோல் நான்கு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் இருப்பு வைத்திருப்பதால், டெல்லியின் முக்கியமான ஐந்து நுழைவாயில்களை தடுக்கப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்