ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் ஆந்திர முதல்வர் - உறுதி பத்திரத்தில் கையெழுத்திட எதிர்க்கட்சிகள் கோரிக்கை

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேரில் வருகை தந்து, ஏழுமலையானுக்கு, பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் ஆந்திர முதல்வர் - உறுதி பத்திரத்தில் கையெழுத்திட எதிர்க்கட்சிகள் கோரிக்கை
x
இன்று மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம், சமர்ப்பிக்க உள்ள நிலையில், அந்நிய மதத்தினர் கோவிலுக்குள் செல்லும் பொழுது உறுதி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நடைமுறைப்படி, தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவினர், முதல்வரும் கண்டிப்பாக கையெழுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, திருமலைக்கு செல்லும் போது தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் பிஜேபியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுகுணா உள்பட பல முக்கிய பிரமுகர்களை வீட்டுக்காவலில் போலீசார் அடைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்