நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத் தொடர் - சோனியா, ராகுல் வெளிநாடு பயணம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
நாளை தொடங்குகிறது மழைக்கால கூட்டத் தொடர் - சோனியா, ராகுல் வெளிநாடு பயணம்
x
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். ராகுல் காந்தியும் உடன் சென்றுள்ள நிலையில், நடப்பு கூட்டத்  தொடரில் சோனியா பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. ஒருசில நாட்களில் நாடு திரும்பும் ராகுல்காந்தி , கூட்டத் தொடரில் பங்கேற்பார் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டியது குறித்து, அக்கட்சி எம்.பி.க்களுக்கு சோனியா காந்தி  தெளிவான அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்