ராகுல்காந்தி உடன் சச்சின் பைலட் சந்திப்பு - காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்ற உறுதி

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள, சச்சின் பைலட் ராகுல்காந்தியை சந்தித்து விளக்கமளித்தார்.
ராகுல்காந்தி உடன் சச்சின் பைலட் சந்திப்பு - காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்ற உறுதி
x
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் மோதல் வலுத்து வருகிறது. பிரச்சினை தீவிரமானதால் சச்சின் பைலட் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பிரிந்துசென்று, ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து, சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறாக, ராஜஸ்தான் அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவிவரும் சூழலில், டெல்லி சென்ற
சச்சின் பைலட் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து விளக்கமளித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, ராஜஸ்தான் காங்கிரசில் நீடிக்கும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்