"மத்திய அரசு, எந்த மொழியையும் திணிக்காது" - அமைச்சர் ரமேஷ் போக்ரியால் டுவிட்டரில் பதிவு
மத்திய அரசு எந்த ஒரு மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்காது என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு எந்த ஒரு மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்காது என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். டுவிட்டரில், புதிய கல்வி கொள்கை தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்திற்கு பதில் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டலை எதிர்பார்ப்பதாகவும், மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story