"சத்துணவுக்கான செலவுத் தொகை, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்" - அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் உத்தரவு
பள்ளி குழந்தைகளுக்கான சத்துணவு செலவுத் தொகையை, அவர்களுக்கு வழங்க வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி குழந்தைகளுக்கான சத்துணவு செலவுத் தொகையை, அவர்களுக்கு வழங்க வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பள்ளிகள் மூடியிருந்தாலும், மதிய உணவுக்கான செலவுத் தொகை வழங்கப்பட்டால், அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது மதிய சத்துணவு திட்டம், மீண்டும் தொடங்கும் என ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
Next Story