புதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி தொடங்கிய கூட்டத் தொடரில் 3 நாட்களுக்கு ஜெயபால் எம்எல்ஏ பங்கேற்றுள்ளார். இதனால், சட்டப்பேரவை வளாகம், மாமன்றம் ஆகிய பகுதிகள் முழுவதுமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், இன்று நடைபெற இருந்த சட்டப்பேரவை கூட்டம், மாமன்றத்திற்கு பதிலாக  சட்டமன்ற வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் நடத்தப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் முதன் முறையாக எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட எம்எல்ஏ ஜெயபால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்