பிரதமர் மோடி தெரிவித்த கருத்து தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப சிலர் முயற்சி

சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஒருதலைப்பட்சமான எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
x
சீனா விவகாரம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்து தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன படைகள் உட்புக முயன்றால் இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும் என்பதை அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெளிவாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.

இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு இல்லை என பிரதமர் மோடி தெரிவித்தது,  நமது பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலின் விளைவாக ஏற்பட்டது என்றும்,

நமது கட்டமைப்புகளை அழித்து, தனது கட்டமைப்புகளை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நமது எல்லையை பாதுகாக்க வீரர்கள் தங்களுடைய இன்னுரை தியாகம் செய்துள்ள சூழ்நிலையில் அவற்றை இழிவுபடுத்தும் வகையில் சில தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது எனவும் பிரதமர் அலுவலகம் வழங்கியுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்