4 வாக்குகளில் வெற்றியை பறிகொடுத்த வேட்பாளர் - நீதிமன்றம் செல்ல உள்ளதாக உறுதி

ஆரணி அருகே தான் வெற்றி பெற்றதை மாற்றி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டும் சுயேட்சை வேட்பாளர், நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறினார்.
4 வாக்குகளில் வெற்றியை பறிகொடுத்த வேட்பாளர் - நீதிமன்றம் செல்ல உள்ளதாக உறுதி
x
ஆரணி அருகே தான் வெற்றி பெற்றதை மாற்றி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டும் சுயேட்சை வேட்பாளர்,  நீதிமன்றம் செல்ல உள்ளதாக கூறினார். ஆரணி ஊராட்சி ஓன்றிய உள்ளாட்சி தேர்தலில் ஓன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில்  அரையாளம் வேலு,  திமுக சார்பில் தாஸ்,  சுயேட்சை வேட்பாளர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சுயேட்சை வேட்பாளர் சரவணன் 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், ஆனால் அதிமுக வேட்பாளர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகநீதிமன்றத்தை நாட உள்ளதாக சரவணன் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்