106 நாள் சிறை வாசத்துக்கு பின் விடுதலை : இன்று நாடாளுமன்றம் செல்கிறார் ப.சிதம்பரம்
உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலையானார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஜாமின் பெற்ற நிலையில், அமலாக்கத் துறையின் வழக்கு காரணமாக திகார் சிறையில் சிதம்பரம் தொடர்ந்து இருந்து வந்தார். அமலாக்கத் துறை வழக்கிலும், உச்ச நீதிமன்ற அமர்வு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதன்படி, 2 லட்ச ரூபாய் பிணைய தொகை, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது, வழக்கு தொடர்பாக பேட்டி அளிக்கக் கூடாது, சாட்சிகளை கலைக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் 106 நாட்களுக்குப்பின், விடுதலையானார்.
Next Story