"கனிமொழி வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு"
நவ.11-ல் விசாரணை : வழக்கு ஒத்திவைப்பு
கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை, தொடர்ந்து நடத்த, உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. தூத்துக்குடி மக்களவை தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா ஆளுனராக நியமிக்கப்பட்ட பின், வழக்கை திரும்ப பெற்றார். ஆனால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என முத்துராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், உரிய நீதிமன்ற கட்டணத்தை செலுத்தும்படி அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 11 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்
Next Story