"தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பெட்டக திட்டம் : துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி"
கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துவக்கி வைத்தார்.
கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் புதிய திட்டத்தை
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துவக்கி வைத்தார். சென்னை - தலைமை செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 68 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வெள்ள தடுப்பு பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார் இதுதவிர, சென்னை - கிண்டி தொழிற்பேட்டையில் கட்டப்பட்டு உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வணிக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்நிகழ்ச்சியின் மூலம் திறந்து வைத்தார்.
Next Story