"சிறுவாணி குடிநீர் குறித்து தவறான விமர்சனம்" - அமைச்சர் வேலுமணி
"சிறுவாணி அடகு வைக்கப்படவில்லை"
கோவையில் நிறைவேற்றப்பட உள்ள சிறுவாணி குடிநீர் விநியோகம் குறித்து தவறான விமர்சனங்கள் பரப்பப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை காந்தி பூங்காவை திறந்துவைத்த பின் பேசிய அவர், திமுக ஆட்சியில் முடியாத நிலையில் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் சிறுவாணி குடிநீர் விநியோக திட்டம் நிறைவேற்றப்படுவதாக குறிப்பிட்டார். இது குறித்து தவறான விமர்சனங்கள் முன் வைக்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் வேலுமணி, பூச்சாண்டி காட்டி தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று எச்சரித்தார். சிறுவாணி அடகு வைக்கப்படவில்லை எனவும் பராமரிப்பு மட்டுமே செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
Next Story