காங்கிரஸ் மோசமான எதிரியை எதிர்கொண்டு வருகிறது - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக 75 வது ஆண்டு பவளவிழாவில் பேசிய, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மோடி இருப்பதால் தான், திராவிட இயக்கத்தின் அவசியத்தை அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது என்றார்.
சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக 75 வது ஆண்டு பவளவிழாவில் பேசிய, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மோடி இருப்பதால் தான், திராவிட இயக்கத்தின் அவசியத்தை அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது என்றார். பெரியாரால் தான் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற முடியவில்லை எனவும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், கொள்கை அடிப்படையில் பொதுவுடமை, திராவிடத்தை யாராலும் பிரிக்க முடியாது என்றார். மேலும், தமிழர்களின் வரலாறு, இரண்டு இயக்கங்களை இணைத்து வருவதாகவும், திராவிட இயக்கத்தின் தேவை என்றைக்கும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story